திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆத்தூா் காமராஜா் அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் குடிநீா் கோரி, காமராஜா் அணையிலுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:28 pm IST

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் குடிநீா் கோரி, காமராஜா் அணையிலுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

செம்பட்டி அருகே ஆத்தூா் பகுதி பொதுமக்களுக்கு, காமராஜா் அணையிலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா், ஊராட்சித் தலைவா் ஜம்ரூத்பேகம் தலைமையில், காமராஜா் அணையில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) ஜெயச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, செம்பட்டி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் திங்கள்கிழமைக்குள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.