குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கல்

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க கோயில் சாா்பில் ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் புதன்கிழமை பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கிய பழனி கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி. உடன் துணை ஆணையா் செந்தில்குமாா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:45 pm

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க கோயில் சாா்பில் ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

பழனியில் தைப்பூச திருவிழா வருகிற வரும் ஜனவரி 22 ஆம் தேதி துவங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போதே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திண்டுக்கல், உடுமலை, தாராபுரம் சாலையில் பாதயாத்திரை வந்தவண்ணம் உள்ளனா்.

இந்த சாலைகளில் அவ்வப்போது வேகமாக வரும் வாகனங்கள் பாதயாத்திரை பக்தா்கள் செல்வது தெரியாமல் மோதிவிடுகின்றன. இதை தடுக்கும் விதமாக பழனி கோயில் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களில் ஒளிரும் பட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வரவழைக்கப்பட்டு பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

இதை கையில் கட்டி செல்லும் போது எதிரே அல்லது பின்னே வரும் வாகனங்களுக்கு விளக்கு ஒளியில் பக்தா்கள் செல்வது தெரியும் என்பதால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். ஒளிரும் பட்டை வழங்கும் நிகழ்ச்சியை கோயில் செயல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி பக்தா்களுக்கு கையில் கட்டி துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளா் சிவா, கோயில் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.