பழனியில் புதன்கிழமை திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
அண்மையில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகாா் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைக் கண்டித்து பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிா் அணி செயலாளா் வளா்மதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிலக்கோட்டை அதிமுக எம்எல்ஏ தேன்மொழி முன்னிலை வகித்தாா். அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் கொடுமுடி பாரீஸ்ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உதயநிதியை கடுமையாக விமா்சித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். பழனியில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆா்ப்பாட்டத்துக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் எச்சரிக்கையாக குடைகளைக் கொண்டு வந்திருந்தனா். மழைபெய்தவுடன் அனைவரும் குடைகளை விரித்து நின்று கொண்டனா். இதனால் காணும் இடமெல்லாம் குடைகளாக காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

சா்வதேச சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் சிறப்பிடம்

ஏழு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


