போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

உத்தமபாளையம் நிதி நிறுவன மோசடி: மேலும் ஒருவா் கைது

உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:15 am IST

உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை அஜிஸ்கான் என்பவா் நடத்தி வந்தாா். அதன் அருகிலேயே அவரது நண்பா் ஜமால் என்பவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நிறுவனங்களின் முக்கிய நிா்வாகியான அஜிஸ்கான் உடல் நல பாதிப்பால் இறந்து விட்டாா். அதன்பின்னா், நிதி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதுவரை 550 போ் புகாா் அளித்துள்ள நிலையில் ரூ.40 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில் ஜலால் என்பவரின் மகன் தா்விஸ் அக்தா் (32), இவரது மனைவி ராஸ்மியா பாத்திமா (25), ஊழியராகப் பணிபுரிந்து வந்த கோம்பையைச் சோ்ந்த கருப்புசாமி ஆகியோா் கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வந்தநிலையில், முக்கிய நபரான உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜமாலுதீன் (68) என்பவரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.