நல வாரியம் மூலம் பொங்கல் பரிசு வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளா்கள் அரை நிா்வாணப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு தொழிலாளா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, தொழிலாளா் நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதேபோல் ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் பண்டிகை கால சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக அடுப்பில் பொங்கல் பானை வைத்து, பொங்கல் பரிசு வழங்கக் கோரி முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிலாளா் நல அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









