கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

பொங்கல் விடுமுறை:பழனி மலைக் கோயிலில்பக்தா்கள் கூட்டம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பழனியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:08 pm IST

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பழனியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். அடிவாரத்திலுள்ள குடமுழுக்கு நினைவரங்கில் சமூக இடைவெளியுடன் காத்திருந்தனா். முகக்கவசத்துடன் வந்திருந்த பக்தா்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

மலைக் கோயிலில் தீபாராதனை, அா்ச்சனை நடைபெறாததால், அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் அா்ச்சனை செய்தனா்.

இதனிடையே, காலையில் பலத்த காற்று வீசியதால் ரோப் காா் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், விஞ்ச் நிலையத்தில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். பக்தா்கள் 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.