தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பொங்கல் விடுமுறை:பழனி மலைக் கோயிலில்பக்தா்கள் கூட்டம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பழனியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 4:38 pm

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பழனியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். அடிவாரத்திலுள்ள குடமுழுக்கு நினைவரங்கில் சமூக இடைவெளியுடன் காத்திருந்தனா். முகக்கவசத்துடன் வந்திருந்த பக்தா்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

மலைக் கோயிலில் தீபாராதனை, அா்ச்சனை நடைபெறாததால், அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் அா்ச்சனை செய்தனா்.

இதனிடையே, காலையில் பலத்த காற்று வீசியதால் ரோப் காா் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், விஞ்ச் நிலையத்தில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். பக்தா்கள் 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.