அண்ணன், தம்பிகளாய் பழக வேண்டிய அண்டை மாநிலத்தவர்கள் தண்ணீருக்காகவும், மின்சாரத்துக்காகவும் அடித்துக் கொள்வதும், அதையே சாக்காக வைத்து இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவித்து, பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்து பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி கொடுப்பதுபோல, ""பேராபத்தில் சிக்கியவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரும் ஓர் இந்தியரே, அவரைக் காப்பாற்றுவதும் என் பணியே'' என இயற்கையை எதிர்த்துப் போராடி, உயிர்களைக் காக்கும் நெஞ்சுரம் கொண்ட நம் வீரர்களை நாம் போற்ற வேண்டும்.