அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஒப்பந்தம், அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்னை, நமது நாட்டுக்கு எதிராக அன்னிய மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளன என்பது ஏற்கெனவே வெட்டவெளிச்சமாகியுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, மன்மோகன் சிங், தனது அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து இவ்வாறு பேசியிருப்பது நகைமுரண்.