வள்ளுவர் வழியில் காந்தியார்
இந்தியாவில் 1918க்குப் பிறகு ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியார் மகாத்மா என்று பாராட்டப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு மகாத்மா என்ற சிறப்புப் பெயர் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தரப்பட்டது என்று பலரால் கூறப்படுகிறது.










