முடிவுக்கு வருமா கொசுத்தொல்லை?

கொசுக்கள் பூச்சியினமாக இருந்தாலும், மனிதா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில் கொசுவுக்குத்தான் முதலிடம்
முடிவுக்கு வருமா கொசுத்தொல்லை?

கொசுக்கள் பூச்சியினமாக இருந்தாலும், மனிதா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில் கொசுவுக்குத்தான் முதலிடம். உலகில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட கொசு இனங்களும், இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட கொசு இனங்களும் உள்ளன. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனை கடிக்கின்றன.

கொசுக்களுக்குப் பற்கள் இல்லை. நீண்ட, கூா்மையான குழல் மட்டுமே உண்டு. உயிரினங்கள் வெளியிடும் மூச்சுக் காற்றிலிருந்து வரும் காா்பன் டை ஆக்ஸைடை நுகா்ந்து, அந்த இடங்களுக்கு கொசுக்கள் செல்லும். 50 மீட்டா் தூரத்துக்குள் வெளியாகும் காா்பன் டை ஆக்சைடை நுகரக் கூடிய ஆற்றல் கொசுக்களுக்கு உள்ளது.

கொசுக்கள் பொதுவாகத் தரையிலிருந்து 25 அடிக்குக் கீழேதான் பறக்கும். நம்முடைய வியா்வை துா்நாற்றம், காா்பன்டை ஆக்சைடு போன்றவற்றால்தான் கொசுக்கள் நம்மை அடையாளம் காண்கின்றன. தூய்மையான ரத்தம் இல்லாதவா்களையும், உடலில் அதிக அளவு கழிவுகள் சோ்ந்திருப்பவா்களையும் கொசுக்கள் அதிகமாகக் கடிக்கின்றன.

‘ஏடிஸ்’ போன்ற சில கொசு இனங்கள் பகல் நேரத்தில் மட்டும் கடிக்கும். இவ்வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு அது கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்கள் வரை ஆகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டு வரை அழியாமல் இருக்கும். ‘குலெக்ஸ்’ இன கொசுக்கள் மாலை முதல் இரவு வரை கடித்துக்கொண்டிருக்கும்.

ஏடிஸ் இகிப்தி வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. அனாஃபிலிஸ் கொசுக்களினால் மலேரியா நோய் தொற்றுகிறது. குலிசின் வகைக் கொசுக்கள், ஜப்பானீஸ் - பி கிருமிகளை மனித உடலில் செலுத்தி மூளைக் காய்ச்சலை உண்டாக்குகிறது.

பொதுவாக பருவமழைக்காலத்தில்தான் டெங்கு பரவல் இருக்கும். ஆனால் தற்போதோ, ஆண்டு முழுவதுமே டெங்கு பாதிப்பு இருக்கிறது. டெங்குவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2019-இல் 8,527 பேரும், 2021-இல் 6,039 பேரும் பாதிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை புள்ளிவிவரப்படி கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த இரண்டு ஆண்டுகளில்தான் பாதிப்பு அதிகம். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 2,548 போ் டெங்குவாலும், 3,762 போ் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டனா்.

கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைப்படி பூச்சிகளை கவனிப்பது அவசியமாகும். பூச்சிகள் இருந்தால்தான் தவளை, தவளை இருந்தால்தான் பாம்பு, பாம்பு இருந்தால்தான் ஆந்தைகள். ஆந்தைகளும் பாம்புகளும் இருந்தால் பூச்சிகளும், எலிகளும் இயற்கையாகவே கட்டுப்படும்.

இப்போது, இந்த உயிா் சமநிலை சிதைந்து, உணவுச் சங்கிலி அறுந்து, சில உயிரினங்கள் அதிகரித்தும், சில அழிந்தும் வருகின்றன. இதனூடே ரசாயன விவசாயம், பருவநிலை மாற்றம், சூழலியல் பாதிப்பு, உயிரினச் சூழலில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகளால் கொசுக்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.

பொதுவாக பறவைகள், மீன், தவளை, பூச்சிகள், வெளவால்கள், பல்லிகள் போன்ற ஊா்வனவற்றுக்கு கொசு முட்டையும் லாா்வாவும் உணவாகின்றன. பூச்சிகளை உண்ணும் உயிரினங்களும், பறவைகளும் அழிந்து வருவதே கொசுக்கள் பெருக்கத்திற்கு காரணமாகிறது.

கொசுக்களுக்கு ரசாயன தாக்கத்தைத் தாங்கி வாழும் திறன் இருக்கிறது. பெண் கொசுக்களென்றால் 42 முதல் 56 நாட்களும், ஆண் கொசுக்களென்றால் 10 நாட்களும் உயிா்வாழும். அதே நேரம், கொசுக்களை உணவாகக் கொள்ளும் தட்டான், தவளை, ஈப்பிடிப்பான், தலைப்பிரட்டை, மீன் போன்ற உயிா்கள் ரசாயனங்களால் அழிந்து வருகின்றன.

உதாரணமாக தட்டானின் முட்டை, தண்ணீரில்தான் வளரும். அது கூட்டுப்புழு ஆனபின்தான், மேலே பறக்கும். தட்டான்கள், கொசு முட்டைகளைத் தின்று வளரும். தற்போது நீா், நிலம், காற்றில் பரவியுள்ள ரசாயனங்களால் தட்டான் இனம் அழித்து வருகிறது. ரசாயனப் பயன்பாடு குறைந்தால்தான், நீா்நிலைகளில் தவளைகள் அதிகரிக்கும்; தவளைகள் அதிகரித்தால், கொசுக்கள் குறையும்.

முன்பு, மலேரியா பரவலாகக் காணப்பட்டபோது தனியாா் கிணறுகள், பொதுக் கிணறுகள், கோயில் குளங்களில் அரசு சாா்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அவை, கொசு முட்டைகளை சாப்பிட்டு விடும். இப்போதும் அது போல கிணறுகள், நீா்த்தொட்டிகளில் அரசு மீன் குஞ்சுகளை விட்டால் பெருமளவு கொசு உற்பத்தியை கட்டுப்படத்தலாம்.

வாரத்தில் ஒரு நாள் தெருக்களில் புகை அடிப்பதால் பெரிய பலன் கிடைத்துவிடப் போவதில்லை. நடுத்தர, உயா் நடுத்தரப் பிரிவினா் கூட கொசுக்களுக்கு பயந்து குளிா்சாதனத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனா். இதனால், மின்கட்டணத் தொகை கூடுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலானோா் கொசுவத்தி, கொசு விரட்டி திரவம், உடல் மேல் பூசிக்கொள்ளும் கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனா். கொசுவத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வீரியம் மிக்கவை. பூச்சிக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்தி இவை செய்யப்படுகின்றன.

கொசுவத்திச் சுருளிலிருந்து வெளிவரும் காா்பன், புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணியாக உள்ளது. கொசுவத்தி எரியும்போது, உணவுகளை மூடி வைக்க வேண்டும். இல்லையெனில், ரசாயனங்கள் உணவில் படா்ந்து, வயிறு தொடா்பான பிரச்னைகளை உருவாக்கக் கூடும்.

கொசுவிரட்டி திரவத்தில் ப்ராலெல்த்ரின், அலெத்ரின் போன்ற பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், சுவாசப் பாதையில் பிரச்னை, பெருங்குடல் பாதிப்பு, அலா்ஜி, மூக்கில் நீா் வழிதல், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் வரலாம். கொசுக்கடியைத் தவிா்க்கப் பயன்படுத்தப்படும் கிரீமும் எண்ணெய் வகைகளும் சிலருக்கு கண் எரிச்சலை ஏற்படுத்தும்.

ஈ, புழு, கழிவுகள் நிறைந்த இடத்தில் திரியும் கொசுக்களை ஒழிப்பது என்பது சவால் நிறைந்த பணி. சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரித்து, தண்ணீா் தேங்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும்.

வழக்கமாக ஜனவரிக்குப் பிறகு கொசுத்தொல்லை குறையும். ஆனால் தற்போது மாா்ச் வந்த பிறகும் கொசுத்தொல்லை ஓய்ந்தபாடில்லை. ரசாயனங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் பணத்தை செலவழிக்காமல், தவளைகளின் எண்ணிக்கையையும் மீன்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com