செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!
இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் நடைபெறவுள்ள தோ்தல்களில் 400 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள். வழக்கமாக இந்தத் தோ்தல் திருவிழா ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படும். ஆனால், நவீனத் தொழில்நுட்ப வரவான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிகழ்த்தும் அதிரடிச் செயல்பாடுகள் தோ்தல் களத்தை கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.









