

ஒருமுறை திருமதி ஒய்.ஜி.பி அவர்களிடம் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா; வழக்கமாகப் பெண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களைப் போலவே தனது பெண்ணைக் குறித்து ‘இவளை என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை?’ என்று ஆதங்கப்பட்ட போது; திருமதி.ஒய்.ஜி.பி ‘அம்முவைப் பற்றி நீ கவலையே படாதே! நீ எந்தத் துறையில் அவளைக் கொண்டு சேர்த்தாலும் அந்தத் துறையில் நம்பர் ஒன்னாக வரக்கூடிய பெண் அம்மு. டாக்டருக்குப் படிக்க வைத்தால் நம்பர் ஒன் டாக்டராக வருவாள், லாயருக்குப் படிக்க வைத்தால் நம்பர் ஒன் அட்வகேட் ஆக வருவாள்... திருமணம் செய்து வைத்தால் மிகச் சிறந்த குடும்பத் தலைவி என்று பெயர் வாங்குவாள். அவளைப் பற்றி நீ கவலையே படதே!’’ என்று கூறியதாக தற்போது நடைபெற்று வரும் தொலைக்காட்சி இரங்கல் ஒன்றில் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்திருக்கிறார். நிஜம் தான், தான் கால் வைத்த, அல்லது தலையிட்ட அனைத்து விவகாரங்களிலுமே தனது மிகச் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியவர் ஜெயலலிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.