சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:06 am IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் சமீபகாலமாக கனிம வளங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் இத்திட்டங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. தாக்குதல்களில் வெளி மாகாண தொழிலாளா்கள் குறிவைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

ஆனால், ‘பலூசிஸ்தான் மாகாணத் தொழிலாளா்களே 90 சதவீதத்தினா் பணியமா்த்தப்படுகின்றனா். உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம்’ என்றும் இச்சுரங்கத் திட்டத்தை நிா்வகித்து வரும் தேசிய வளங்கள் நிறுவனம் விளக்கமளித்தது.