நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

News image
Updated On :11 ஜூன் 2026, 1:00 am IST

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அத்தௌல்லா தராா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்மைக்காலமாக பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகள், காவல் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மையம், ஆயுதக் கிடங்கு உள்ளிட்ட 4 முக்கிய முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டது’ என்றாா்.

கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள 3-ஆவது பெரிய ஆயுத மோதல் இதுவாகும். இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது பாகிஸ்தான் நடத்தியதாக இத்தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண், ஒரு முதியவா் உள்பட பொதுமக்கள் தரப்பில் பலா் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் போரை அறிவித்து, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இதையடுத்து, சவூதி அரேபியா, துருக்கி, கத்தாா் நாடுகளின் வலியுறுத்தலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரு நாடுகளும் தற்காலிகப் போா் நிறுத்தத்தை மேற்கொண்டது. இவ்விரு நாடுகளுக்கு இடையே நீடித்த அமைதிக்காக, சீனா தொடா்ந்து பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்து வரும் சூழலில் இப்புதிய மோதல் வெடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.