சமீபத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். காற்று மாசுபாட்டைப் பற்றியும் அதனால் விளையக்கூடிய கேடுகளைப் பற்றியும் அறிந்தவர்களாயிருந்த போதிலும் நம்மில் பலர் அதன் மோசமான விளைவுகளையும் அதனால் மனித ஆரோக்யத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறோம். இதனால் என்ன ஆகும்? இன்று 3,00,000 என்றிருக்கும் பலி எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காகி விடக்கூடும். உலகில் 80 % மக்கள் வாழுமிடங்கள் பெரும்பாலும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுத் தர நிர்ணயித்தின் படி வாழத் தகுதியற்ற் விஷக் காற்று நிரம்பியுள்ள இடங்களென சமூக நல ஆர்வத்துடன் எடுக்கப்பட்டதொரு சர்வே கூறுகிறது.
உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என லேண்ட்மார்க் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசால் நேரக்கூடிய மரணங்கள் மனிதனின் சுவாச மண்டலத்துடன் தொடர்பு கொண்டவை. மாசடைந்த காற்றிலுள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நச்சுத் துகள்களை நுரையீரல் சுவாசிப்பதன் மூலமாக ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. சிலருக்கு காற்று மாசுபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து நேரடியாக நுரையீரல் கேன்சரும் வரக்கூடும்.
காற்று மாசுபாட்டை பொதுவாக;
- என இருவகையாகப் பிரிக்கலாம்.
உட்புறக் காற்று மாசுபாடு...
வெளிப்புறக் காற்று மாசுபாடு...
இந்த இருவகை காற்று மாசுக்கும் காரணமான நச்சு வாயுக்கள் எவையென்றால்;
கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டையாக்ஸடு, சைஃபர் டையாக்ஸைடு, தொழிற்சாலைப் புகை போக்கிகள் வழியே வெளியேறும் காரீயம் மற்றூம் ஆர்செனிக் கழிவுகள், பாதரசக் கழிவுகள் உள்ளிட்ட நச்சு வாயுக்களால் தான் காற்று மாசுபாட்டு மரணங்கள் நிகழ்கின்றன. இந்த வாயுக்கள் காற்றில் கலந்து காற்றின் தூய்மையைக் கெடுத்து சுவாசிக்க தரமற்ற அசுத்தக் காற்றாக மாற்றுகின்றன.
இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் அதைச் சுவாசிக்கையில் அதிகப்படியான நச்சு வாயுக்களை வடிகட்ட இயலாமல் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் நுரையீரல் செயல்பாடு ஒடுங்குகிறது. கருவுற்ற பெண்களிடையே இந்தக் காற்று மாசுபாடானது கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது.
பூமியில் அதிகரிக்கும் காற்றுமாசுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தக்கூடிய தலையாய பிரச்னைகளில் ஒன்றாகியுள்ளது. 60 வருடங்களுக்கு முன்பே காற்று மாசுபாடெனும் ஒரு காரணத்தைப் பிரதான ஆய்வுக்கு உள்ளாக்கி அதனால் மனித ஆரோக்யத்தில் நிகழக்கூடிய மோசமான பின்விளைவுகளைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஐக்கிய நாடுகளில் கூட இன்னமும் இது ஒரு தீராத பிரச்னையாகவே நிலைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளைத் தவிர்த்து காற்றுமாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசித்து அதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இந்தப் பிரச்னை குறித்துத் தொடர்ந்து போராடி வரும் உலக நாடுகள் பலவற்றிலேயே இன்னமும் அதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள். அப்படி இருக்கையில் காற்றூ மாசுபாடு குறித்துப் பெரிதாக அக்கறை காட்டாத மக்கள் நிறைந்த இந்தியாவில் இதனால் எதிர்காலத்தில் நேரக்கூடிய மரண எண்ணிக்கைகளைக் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.
காரணம், எவ்வளவு தான் போராடியும் கூட...
இச்சூழ்நிலையில்... இப்போதேனும் காற்று மாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசிக்கத் தலைப்படா விட்டால் வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியற்ற பூமியை விட்டுச் சென்றவர்களாவோம்!
Image courtesy: Financial express.
சைக்கோ பெற்றோர் VS அப்பாவிக் குழந்தைகள்!
சும்மாக் கொடுப்பார்களா துணிச்சலுக்கான தேசிய விருது?! இவர்கள் செய்த தீரச்செயல்கள் அப்படிப்பட்டவை!
மஞ்சள் நீராட்டுவிழா அலைஸ் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’!
நான் கருப்பு எனில், நான் வணங்கும் கடவுள் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாதா?!
ஆணவக் கொலைகளை அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?