திருமதி டெய்ஸி இராணியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களில் வெளிவந்துள்ளது. ஆனால், சம்பவம் நடந்த சில தினங்களில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் டெய்ஸி. அவருடைய குடும்பம் நடந்த தவறை விட, அதை மறைப்பதற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், முதலில் செய்ய வேண்டியது தனக்கு நடந்த விஷயத்தை தைரியமாக வெளியே சொல்வதுதான். இதில் டெய்ஸி எந்த தவறுமே செய்யவில்லையே! பிறகு ஏன் தவறை மறைக்க வேண்டும்? குடும்பம், கெளரவம் போன்றவற்றை மனத்தில் கொண்டு டெய்ஸி குடும்பம் செய்த தவறு, நாசர் என்ற அந்த மனித மிருகம் கடைசிவரை தண்டிக்கப்படவேயில்லை. அவன் இன்னும் எத்தனை குழந்தைகளை சிதைத்தான் என்பது யாருக்கும் தெரியாது.