அறிவியல் ஆயிரம்: எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள் - ஒரு திருப்பம்!

எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள் பற்றி...
எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள்
எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள்
Updated on
5 min read

துட்டன்காமனின் கல்லறைதான், எகிப்திய பாரோக்களில்/அரசர்களில், முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே அரச கல்லறையாக இருந்தது.

அதில் கிடைத்த பொற்கலங்கள், முகமூடி, தேர்கள், ஆடைகள், செருப்புகள் - இவை அனைத்தும் பழமையான எகிப்தின் சமூக, அரசியல், ஆன்மிக வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெளிவாகப் பேசுகின்றன.

மறைந்தபின் புகழ்

துட்டன்காமன் ஆட்சி சாதாரணமானதாக இருந்தாலும், மரணத்திற்குப் பின் அவன் உலகின் மிகவும் பிரபலமான எகிப்திய பரோனாக மாறினான்.

இன்று, அவற்றில் பல கிராண்ட் எகிப்திய அருங்காட்சியத்தில் (Grand Egyptian Museum) காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

"செருப்படி எடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும், பாரோன் தன் எதிரிகளை மிதித்து நசுக்கினான். ஆம், பண்டைய எகிப்தின் இளம் மன்னன் துட்டன்காமனின் காலணிகளிலேயே அவன் வெற்றிகள் பொறிக்கப்பட்டிருந்தன!"

80 இணைப்புக் காலணிகள்

துட்டன்காமன் கல்லறையில் பசும் பனை ஓலையால், பொன்னால், சிறு சிறு நாணல் இலைகளால், பொன்னால், ரத்தினத்தால், தயாரிக்கப்பட்ட காலணிகள் 80-க்கும் மேல் கிடைத்துள்ளன. வேடிக்கையாக இருக்கிறதா? இதோ, வரலாற்றின் மிகப் புகழ்பெற்ற சிறுவன் மன்னன் துட்டன்காமனின் அலமாரிக்குள் ஒரு பயணம்!"

துட்டன்காமன் பற்றிய சுவையான தகவல்கள்

துட்டன்காமன் ஒரு சாதாரண மன்னன் அல்ல. அவன் பண்டைய எகிப்தை ஆண்ட "பாரோக்கள்" எனப்படும் மாமன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன். அவன் ஆட்சி புரிந்த காலம் சுமார் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு. எகிப்தின் 18 ஆம் வம்சத்தைச் சேர்ந்த இளம் பாரோ (எகிப்தின் அரசன்). அவன்  மிகவும் சிறுவயதிலேயே, அதாவது 9 வயதிலேயே அரசனாக முடிசூட்டப்பட்டான். ஆனால் மரணமும் அவனை வெகு சீக்கிரம் வந்தடைந்தது அவன் இறந்தபோது அவனுக்கு வயது 19 தான். அவ்வளவு இளம் வயதில் இறந்து போனதாலேயே அவன் உலகப் பிரசித்தி பெற்றான். அவனுடைய கல்லறை முழுமையாக, கொள்ளையடிக்கப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டதுதான் காரணம்.

1. புகழ்பெற்ற பொன் முகமூடி

நீங்கள் எப்போதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ பளபளக்கும் நீலம் மற்றும் பொன் நிற பெரிய முகமூடி பார்த்திருக்கிறீர்களா? அது தான் துட்டன்காமனின் முகமூடி. அது 11 கிலோ எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்டது. அதில் விலை உயர்ந்த கற்கள்  பதிக்கப்பட்டிருந்தன.

2. விண்வெளியில் இருந்து வந்த குத்துவாள்

அவனுடைய கல்லறையில் ஓர் அற்புதமான இரும்பு குத்துவாள் (dagger) கிடைத்தது. சமீப ஆராய்ச்சியில், அந்தக் குத்துவாள் செய்யப்பட்ட இரும்பு, விண்வெளியில் இருந்து வந்த விண்கல்லில் (meteorite) இருந்து எடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது! அதாவது, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் விண்கல்லை உருக்கி ஆயுதம் செய்யும் தொழில்நுட்பம் பெற்றிருந்தனர்.

3. நடக்க சிரமப்பட்ட மன்னன்

அவன் காலணிகளைப் பற்றி தானே பேசுகிறோம்? அவனுக்கு ஒரு கால் ஊனம் இருந்ததாகவும், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால்தான் அவனிடம் நிறைய காலணிகள் இருந்திருக்கலாம். அவன் நடக்க உதவியாக ஏராளமான கைபிடித்து நடக்கும் 130 ஊன்றுகோல்களும் அவன் கல்லறையில் கிடைத்தன.

4. இரட்டைக் குழந்தைகளின் கல்லறை

துட்டன்காமனின் கல்லறையிலேயே இரண்டு சிறிய, முதலை எலும்புகள் புதைக்கப்பட்டிருந்தன. அவை அவனுடைய இரண்டு பெண் குழந்தைகளுடையது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைகள் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன.

5. தனி ரயில் பெட்டி

1922-ல் அவன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டபோது, அதிலிருந்த பொருட்களை வெளியே எடுத்து, கெய்ரோ நகருக்கு அனுப்ப ஒரு தனி ரயிலே ஏற்பாடு செய்யப்பட்டது! அந்த அளவுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் கல்லறையில் இருந்தன.

 6. மர்மமான மரணம்

அவன் எப்படி இறந்தான் என்று இன்றும் சரியாகத் தெரியவில்லை. வேட்டையாடும்போது ஏற்பட்ட விபத்தா? நோய்வாய்ப்பட்டானா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? இது இன்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே ஒரு புதிர்.

துட்டன்காமனின் செருப்புகள் – ஒரு பார்வை

 ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter) என்பவர் தலைமையிலான அகழாய்வில், 1922 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட களவாடப்படாத நிலையில் துட்டன்காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அது தொல்லியல் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

கி.பி. 1922 ஆம் ஆண்டு, மணற்குன்றுகளின் அமைதியை உடைத்து, இளம் பருவப் பரோன் துட்டன்காமன் (Tutankhamun) கல்லறை உலகின் கண்முன் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொருட்கள் - பொற்கலங்கள், தேர்கள், சடங்கு உபகரணங்கள் அவற்றின் ஊடே மிகுந்த கவனத்துடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பல டஜன் ஜோடி செருப்புகள்.

அவை வெறும் காலணிகள் அல்ல. அவை அரசரின் நடைமுறையையும், நம்பிக்கையையும், உடல்நல குறைகளையும் சொல்லும் சாட்சியங்கள்.

ஓர் அரசனுக்கான காலணிகள்

குறைந்தது 80 ஜோடி செருப்புகள் துட்டன்காமன் (Tutankhamun) கல்லறையில், அவனோடு சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

அவை, பனை இலை, பாப்பிரஸ், புல், தோல், ரத்தினக்கற்கள், பொன் - இவ்வாறான பல்வேறு பொருட்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. சில எளிய தையல் வேலை கொண்ட செருப்புகள்; சில பொன் பொறித்தல், தோல் வண்ணமிடல், ரத்தினம் பதித்தல் போன்ற நுணுக்கக் கலைகளைத் தேவைப்படுத்திய அற்புத ஆக்கங்கள்.

பரோனின் மம்மியின் பாதங்களில் அணிவிக்கப்பட்டிருந்த பொற்காலணிகள்கூட ஆடம்பர அலங்காரத்தை விட எளிமையான வடிவில் இருந்தன. ஆனால் அவை சாதாரண தையல் செருப்புகளின் ஒவ்வொரு தையல் கோட்டையும் பொன்னில் பொறித்துத் திரும்ப உருவாக்கப்பட்டவை.

எளிமையின் உள்ளே ஆடம்பரம்; ஆடம்பரத்தின் உள்ளே சின்னம். பழைய நைல் பள்ளத்தாக்கில் குறைந்தது 4,000 ஆண்டுகளுக்கு முன்பே செருப்புகள் பயன்பாட்டில் இருந்தன என்பது இதன் மூலம் தெரியவருகிறது. அன்றைய சமூகம் காலணிகளை செல்வச் சின்னமாகக் கண்டது. சாதாரண மக்கள், எவ்வித காலணியும் இன்றி  நிர்வாண பாதங்களோடு நடந்தனர்; செருப்பு அணிவது அரச குலத்திற்கும் உயர்ந்த அதிகாரிகளுக்கும் உரிய உரிமை மரபாக இருந்தது.

எகிப்திய ஆய்வாளர் சலீமா இக்ராம் கூறியதாவது:

“துட்டன்காமனின் சில காலணிகளில் பொன் துண்டுகள், மரத்தோல், எலும்பு, கண்ணாடி பதிப்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை செருப்புகளை ஒரு சாமான்ய உடைமையிலிருந்து ஒரு கலைப்பொருளாக உயர்த்துகின்றன.”

ஒவ்வொரு அடியும் - ஓர் அரசியல் அறிவிப்பு

ஒரு சிறப்பான ஜோடி செருப்பின் உள் அடிப்பகுதியில் கட்டுண்ட கைதிகள் படமாகப் பொறிக்கப்பட்டிருந்தனர். அது சாதாரண அலங்காரம் அல்ல. எகிப்தின் பாரம்பரிய Nine Bows சின்னத்தின் அடையாளம் அது. எகிப்தின் எதிரிகளை குறிக்கும் உருவகம்.

அரசன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், “என் காலடியில் எதிரிகள்” என்று அரசியல் மற்றும் ஆன்மீக அறிக்கையை உலகுக்கு அறிவித்தது.

 அந்த காட்சிப்படம், அரச அதிகாரம் என்பது உடல் ஆற்றலுக்கே உரியது அல்ல; அது சின்னங்களின் ஆட்சியும் கூட என்பதைக் காட்டுகிறது.

ஒரு மறைந்த பலவீனத்தின் சுட்டுமொழிகள்

இன்றைய நவீன சிடி ஸ்கேன் ஆய்வுகள் துட்டன்காமனுக்கு, இணைந்த பாதங்கள் (clubfoot)  எனப்படும் கால்வளைப்பு குறைபாடு இருந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

மரபணு பரிசோதனை ஆய்வுகள் மலேரியா போன்ற உடல்நல சிக்கல்களையும் காட்டுகின்றன.

கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட சில செருப்புகள், மற்ற எகிப்திய காலணிகளில் காணப்படாத விசித்திரமான பட்டை அமைப்புகளைக் கொண்டிருந்தன. அவை அரசரின் நடையைச் சீராக்க உருவாக்கப்பட்டவையா? அல்லது வெளிநாட்டு தாக்கத்தால் வந்த புதிய வடிவமா? அல்லது இன்றுவரை அறியப்படாத அரச ஆடை மாறுபாடா?

இதற்கு தெளிவான பதில் இல்லை.

செருப்புகளின் அணியும் அமைப்பு (wear pattern) என்பது அரசன் மாறுபட்ட நடை கொண்டிருந்தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாழ்க்கைக்கா? மறுபிறப்புக்கா?

இந்த செருப்புகள் அனைத்தும் அரசன் வாழ்நாளில் பயன்படுத்தியவையா? அல்லது மறுபிறப்பின் பயணத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவையா? பழைய எகிப்திய நம்பிக்கையில், மறுபிறப்பு உலகிற்குச் செல்லும் அரசனுக்கு உணவு, ஆயுதம், உடை அனைத்தும் தேவைப்படும். அந்த பயணத்தில் காலணியும் அவசியம்.

ஆகவே, இவை சில உயிர்க்கால நடைகளுக்கானவை அல்ல; மரணத்திற்குப் பின் தொடரும் நடைபாதைக்கானவையாகவும் இருக்கலாம்.

இன்றைய காட்சியகம்: இன்று, கெய்ரோவில் அமைந்துள்ள கிராண்ட் எகிப்திய அருங்காட்சியத்தில், துட்டன்காமனின் ஆயிரக்கணக்கான பொருட்களுடன் இந்த செருப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றை நோக்கும்போது, அவை வெறும் காலணிகள் அல்ல. அவை வரலாறு நடந்து சென்ற தடங்களின் சின்னங்கள்.

ஓர் இளம் அரசன், அரசாட்சியின் பெருமையையும், உடலின் பலவீனங்களையும், நம்பிக்கையின் நீண்ட பாதையையும் தன் காலடியில் சுமந்தவன்.

எகிப்தின் சிற்றரசன் துட்டன்காமன் மாத்திரம் தன் காலடியில் எத்தனை எத்தனை எதிரிகளை நசுக்கியிருப்பான்? அவன் காலணிகளிலேயே அவன் வெற்றிகள் பொறிக்கப்பட்டிருந்தன! அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க அரச காலணிகளின் தொகுப்பைப் பற்றிய ஒரு நுட்பமான பார்வையோடு  இங்கு வருகிறது.

இந்தக் காலணிகளே இப்போது மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. பண்டைய எகிப்தின் அரச வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கைகள், மற்றும் மன்னனின் உடல் நலம் குறித்த நடைமுறை சார்ந்த தடயங்களை இவை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அந்த இளம் பாரோனால் நடக்கவே சிரமப்பட்டிருக்கக் கூடும் என்கிற ஆதாரங்களும் இவற்றில் புதைந்துள்ளன.

ஓர் அரசனின் பாதரட்சைகள் - சிறப்பு கவனத்துடன் தயாரிப்பு

துட்டன்காமனுடன் குறைந்தது 80 இணைப்புக் காலணிகளும் மிதியடிகளும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. பனை ஓலை, நாணல், தோல், இரத்தினக்கற்கள், பொன் எனப் பல்வேறு பொருட்களால் கைவினைஞர்கள் இவற்றை உருவாக்கியிருந்தனர். சில வெறும் நூலால் இணைக்கப்பட்ட எளிய மிதியடிகளாக இருந்தன. வேறு சிலவற்றை உருவாக்க, பொன் தகடுகளில் பொறிப்பதற்கும், தோலுக்குச் சாயமேற்றுவதற்கும், கற்கள் பதிப்பதற்கும் தனித் தனிக் குழுக்களே தேவைப்பட்டிருக்கும்.

அரச மிதியடிகள்.. அந்தஸ்தின் அடையாளம்

"இந்த மிதியடிகள் அந்தக் காலத்தில் மிக முக்கியமான அந்தஸ்தின் அடையாளங்களாக இருந்தன," என்கிறார் தொல்லியலாளர் ஆண்ட்ரே ஜே. வெல்ட்மேயர். "அரச குடும்பத்தினரும், மன்னரால் வெகுமதி அளிக்கப்பட்ட அதிகாரிகளும் மட்டுமே இவற்றை அணிய முடியும். ஆனால், மலிவான பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய தோற்ற மிதியடிகள் ஏன் இவ்வளவு உயர்ந்த மரியாதைக்குரியவையாக இருந்தன என்பது இன்னும் நமக்குப் புதிராகவே உள்ளது."

மன்னனின் மம்மியின் மீது நேரடியாகப் போடப்பட்டிருந்த பொன் மிதியடிகள் கூட வெகு எளிமையான வடிவமைப்பைக் கொண்டிருந்தன. அவை, நூலால் இணைக்கப்பட்ட சாதாரண மிதியடிகளின் நுட்பமான பிரதிகள். அவற்றின் தையல் முறைகள் கூட பொன் தகட்டில் பொறிக்கப்பட்டிருந்தன.

நைல் பள்ளத்தாக்கில் பாத அணிகள் 4,000 ஆண்டுகளுக்கு முன்

நைல் பள்ளத்தாக்கில் காலணிகள் முதன்முதலில் தோன்றியது குறைந்தது 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே. அப்போது அவை பெரும்பாலும் தாவர நார்களால் செய்யப்பட்டன. இன்று நாம் ஒருவர் காலணி அணிந்திருப்பதை எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், அன்று இந்தக் காலணிகள் உயர் அந்தஸ்த்தின் அடையாளமாக இருந்தன. சாமானிய மக்கள் பெரும்பாலும் வெறுங்காலுடனேயே நடந்தார்கள். ஆடம்பரமான காலணிகள் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் அடையாளமாயின. அவற்றின் அலங்காரங்கள் சமயச் சடங்குகளின் பொருளையோ அல்லது சமூக அந்தஸ்த்தையோ காட்டின. எகிப்தியல் அறிஞர் சலிமா இக்ராம் கூறுகிறார்: "துட்டன்காமனின் சில காலணிகளில், பொன், பிர்ச் மரத்தின் பட்டை, எலும்பு மற்றும் கண்ணாடிப் பதிப்புகளைப் பயன்படுத்தி மிகவும் ஆடம்பரமான தோற்றத்தை உருவாக்கியிருந்தார்கள்."

இன்று நாம் பார்க்கும்போது, இந்தச் சேகரிப்பு வெறும் அடக்கம் செய்யும் பொருட்கள் போலல்லாமல், ஓர் அரசனின் அலமாரியாகவே தோன்றுகிறது. ஆனால் பண்டைய எகிப்தில், காலணிகள் அரசியல் மற்றும் ஆன்மிக எடையையும் சுமந்தன.

எதிரியை நசுக்கும் மிதியடி

அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு இணை மிதியடியின் உள்ளங்காலில் கட்டுண்ட எதிரிகள் பொறிக்கப்பட்டுள்ளனர். இளம் அரசன்  எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அடையாளப்பூர்வமாக எகிப்தின் பகைவர்களை நசுக்குவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சி, "மன்னனின் கால்கள் அவற்றின் மீது படும்படி அமைக்கப்பட்டு, அரசன் எகிப்தின் எதிரிகளை மிதித்து நசுக்குவதை மெய்ப்பித்தது" என்று அருங்காட்சியக விளக்கங்கள் குறிப்பிடுகின்றன.

 ஊனம் உணர்த்தும் காலணி

ஆனால், கல்லறையில் கிடைத்த இந்தக் காலணிகள் மன்னன் துட்டன்காமனின் உடல் ஊனத்தையும் காட்டக்கூடும். இந்தக் கல்லறையில் கிடைத்த சில காலணிகள், வேறெந்த எகிப்திய காலணிகளிலும் காணப்படாத பிணைப்பு முறைகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய அம்சங்கள் வேறெந்தக் காலணி அல்லது மிதியடிகளிலும் காணப்படவில்லை," என வெல்ட்மேயர் டிஸ்கவரி நியூஸிடம் தெரிவித்தார். இருப்பினும், காலணிகளின் தேய்மானத்தில் மன்னன் வேறு விதமாக நடந்ததற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றும், இதே போன்ற பிணைப்பு முறைகள் எகிப்துக்கு அப்பாலும் காணப்படுவதால், இது வெறும் வெளிநாட்டுத் தாக்கமாகவோ அல்லது அரச காலணி வடிவமைப்பில் மறைந்துபோன ஒரு மாறுபாடாகவோ இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Summary

Egypt's Young Pharaoh Tutankhamun's Shoes - A Twist!

எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள்
அறிவியல் ஆயிரம்: தனிம அட்டவணையைக் கண்டறிந்த டிமிட்ரி மெண்டலீவ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com