தவறான, பொய்யான தகவல்கள் அல்லது பதிவுகளின் மூலம், எந்த ஒரு தனிநபரையோ, குறிப்பிட்ட பிரிவினரையோ மிரட்டும் விதமாகவோ, தரக்குறைவாகவோ, அவமானப்படுத்தும் விதத்திலோ இணையதளத்தில் கருத்துத் தெரிவிப்பதோ, பதிவு செய்வதோ இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அந்தப் பதிவுகள் மன ரீதியாகவும், கௌரவத்தை பாதிக்கும் விதத்திலும் அமையுமானால் அதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டம் வழிகோலுகிறது. மூன்று ஆண்டு சிறை தண்டனையோ, ரூ.10,000 வரை அபராதமோ, இரண்டும் சோ்ந்தோ தண்டனையாக வழங்கப்படலாம் என்று இப்போது திரும்பப் பெறப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் கூறியது.