இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கலசலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் சுய தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கம்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சுய தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:57 pm

ஜெயகுமார்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சுய தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் கே.ஐ.டி. மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய தென்னிந்திய சுய தொழில் வளர்ச்சிக்கழக பொது மேலாளர் எ.விஜயகுமார், சுய தொழில் தொடங்க, சுய நலம் வேண்டும் என்று கூறினார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களுக்கான தென்னிந்திய சுயதொழில் வளர்ச்சிக் கழக பொது மேலாளர் எ.விஜயக்குமார் சிறப்புரையாற்றி, அவர் கூறியதாவது: சுய தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், மாணவர்களுக்கு இப்போது சுய நலம் வேண்டும். தான் முன்னேறவேண்டும். தான் பிறருக்கு வேலை தர வேண்டும். தான் வேலை தேடிப்போகக் கூடாது என்ற எண்ணம் வேண்டும்.

இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற 40 நாடுகள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி, பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் இந்தியா முன்னேறாததற்குக் காரணம் தொழில் வளர்ச்சியில் முழுச் சுதந்திரம் இல்லை. படிக்கும் மாணவர்கள், வேலை தேடி வேறு நாடுகளுக்குச் சென்று அங்கு தொழில் வளர்ச்சியடைய உதவுகிறார்கள். எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உள்ளார்கள். இந்த மாற்றத்திற்குத்தான் சுய நலம் பேண வேண்டும்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். வகுப்பறையில் அதனைப் போதிக்க வேண்டும். ஹாலந்து நாட்டில் பி.இ. மெரைன் என்ஜினியரிங் உள்ளது. அதில் முதல் பருவத்தில் 6 மாதத்திற்கு ஒழுக்கக் கல்வி (Character Education) என்ற பாடம் உள்ளது. எல்லா பொறியியல் துறையிலும் மென்பொருள், கடினப்பொருள் என இரண்டு உள்ளது. இரண்டிலும் நிங்கள் வல்லவராகத் திகழ வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்கு ஆர்வம் மற்றும் ஊக்கம் தரவேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபட பள்ளிகளில் வசதி செய்து தர வேண்டும் என்றார் அவர்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கே.ஐ.டி. முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் செய்திருந்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.