ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயிலில் தீ விபத்தைத் தடுக்கும் கருவி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

ரயில் வண்டியில் தீப்பற்றி எரிந்தால், அதைத் தானே அணைக்கும் வகையில் தானியங்கி பாதுகாப்புக் கருவியை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2014, 1:11 pm

கோ.ஜெயக்குமார்

ரயில் வண்டியில் தீப்பற்றி எரிந்தால், அதைத் தானே அணைக்கும் வகையில் தானியங்கி பாதுகாப்புக் கருவியை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் கருவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் முரளிவிஜய், மதன், அழகேஷ் கண்ணா ஆகியோர் துறைத் தலைவர் டாக்டர் கண்ணபிரான், பேராசிரியர் செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தங்களது புராஜக்ட் செய்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்:
ரயிலில் மின்கசிவு, பெட்ரோல், பட்டாசு போன்ற பொருட்களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி தீ விபத்து ஏற்படும் போது பயணிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கருவியை வடிவமைத்துள்ளோம்.

இந்தக் கருவியில் லெவல் சென்சார், தெர்மிஸ்டர், ஜிஎஸ்எம், எல்இடி பதிவு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய உதிரிப் பாகங்கள் உ்ள்ளன.

முதலில் தீ விபத்து ஏற்படுவது சென்சார் மூலம் கண்டுபிடிக்கப்படும். உடனே ரயிலில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் தீ விபத்து ஏற்பட்ட பெட்டியினுள் மட்டும் வேகமாக தெளிப்பான் மூலம் தெளிக்கப்படும். தீ மேலும் பரவாத வகையில் ரயில் தானாகவே நிறுத்தப்படும். பின்பு அருகில் உள்ள ரயில் நிலையங்கள், தீயணைப்புத் துறை மற்றும் கார்டு ஆகியோருக்கு ஜிஎஸ்எம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். குளிர்சாதன பெட்டிகள், சாதாரண பெட்டிக்கான கருவி வடிவமைப்பு அதற்கேற்றார்போல் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீரின் அளவு ஏதேனும் ஒரு பெட்டியில் குறைந்தாலும், தகவல் அந்தப் பெட்டி காப்பாளருக்கு தெரிவிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதிரிக் கருவியை காப்புரிமை பெறுவதற்கு சென்னை வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் புதிய வடிவமைப்பை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.