தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆதார் அடிப்படையில் வருகைப் பதிவு: ஹரியாணா அரசுக் கல்லூரிகளில் ஏப்ரல் 1 முதல் அமல்

ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவு

News image
Updated On :21 மார்ச் 2017, 7:21 pm

ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியாணா உயர் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் சண்டீகரில் கூறியதாவது:
ஆதார் அடிப்படையிலான 10 பயோ மெட்ரிக் கருவிகளை ஒரு வாரத்துக்குள் வாங்குமாறு அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயோ மெட்ரிக் கருவிகளில் அங்கு பணிபுரிபவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட தகவல் மையம் அல்லது தேசியத் தகவல் மையத்தை கல்லூரிகளின் அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.