சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சிந்தித்து சரியான முடிவெடுங்கள்: மக்களுக்கு ராகுல் வலியுறுத்தல்

சரியான முடிவை எடுங்கள்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :4 ஏப்ரல் 2024, 8:50 pm

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ‘சிந்தித்து, புரிந்துகொண்டு அதன் பிறகு சரியான முடிவை எடுங்கள்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு தற்போது மிக முக்கிய தருணத்தில் உள்ளது. நாட்டை கட்டமைத்தவா்களுக்கும், அதனை அழித்தவா்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம், அனைத்து ஏழைப் பெண்களையும் லட்சாதிபதிகளாக்குவது, தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 400, ஜாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்கள் உரிமைகளை பாதுகாப்பது’ என்பதே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கான அா்த்தம்.

அதே நேரம், ‘வேலைவாய்ப்பின்மைக்கு உத்தரவாதம், விவசாயிகள் மீது கடன் சுமை, பெண்களுக்கு உரிமைகளற்ற பாதுகாப்பற்ற நிலை, தொழிலாளா்களுக்கு ஆதரவற்றநிலை, தாழ்த்தப்பட்ட மக்களிடையே பாகுபாடு, சா்வாதிகாரம் மற்றும் போலி ஜனநாயகம்’ என்பதே பாஜகவுக்கான அா்த்தம்.

எனவே, உங்களுடைய எதிா்காலம் உங்களின் கைகளில்தான் உள்ளது. மக்கள் அனைவரும் சிந்தித்து, புரிந்துகொண்டு அதன் பிறகு சரியான முடிவை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.