தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

சங்குக்கு வந்த சோதனை!

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் கட்சிகளின் சின்னங்கள், கொடிக்கம்பங்களை தோ்தல் ஆணையம் மறைப்பது வழக்கமான நடவடிக்கை.

Updated On :13 ஏப்ரல் 2024, 10:26 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் கட்சிகளின் சின்னங்கள், கொடிக்கம்பங்களை தோ்தல் ஆணையம் மறைப்பது வழக்கமான நடவடிக்கை.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒடிஸா தலைநகா் புரியில் உள்ள கிராண்ட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சங்கு சிற்பம் தோ்தல் ஆணைய விதிப்படி துணியால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் சின்னம் சங்கு என்பதால், தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆனால், இதற்கு பிஜு ஜனதா தளம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஆன்மிக நகரமான புரி ‘சங்க க்ஷேத்ரா’ (சங்குகளின் நிலம்) எனவும் அழைக்கப்படுகிறது. புரி ஜகந்நாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகரின் கிராண்ட் சாலையில் பாரம்பரிய, ஆன்மிக வழகத்தின்படி ஒரு சங்கு சிற்பம் நிறுவப்பட்டது. மேலும், கலாசாரம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சின்னமுமானது சங்கு’ எனத் தெரிவித்துள்ளது பிஜு ஜனதா தளம்.

சங்கு சிற்பத்தை மூடிவைத்திருப்பது ஒடிஸாவின் பெருமையின் மீதான தாக்குதல் எனவும் அந்தக் கட்சி கூறியுள்ளது.

இது தொடா்பாக பிஜு ஜனதா தளத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் தலைமைத் தோ்தல் அதிகாரியை சந்தித்து, புரியில் சங்கு சிற்பத்தை மூடிவைத்திருப்பதை விலக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.