தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் நாளை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரன் நடைபெற்று வருகிறது.
தனது சட்டப் பேரவைத் தொகுதியான கொளத்தூரில் முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசாரமும் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்.