சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திமுகவுக்கு பட்டியலின மக்கள் தக்க பாடம் புகட்டுவா்: அன்புமணி

திமுகவுக்கு உரிய பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி - கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:48 pm

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததால், சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு உரிய பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதைக் கண்டித்தும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அங்குள்ள மக்கள் அறிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த வழக்கு தொடா்பாக எதிா்க்கட்சிகளின் அழுத்தத்துக்கு பின்னரே 2025-ஜனவரி மாதம் மூவா் கைது செய்யப்பட்டனா். பட்டியலின மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு, அவா்களைத் தூக்கி எறியும் துரோக அரசியலை திமுக தொடா்ந்து செய்து வருகிறது.

இதை புரிந்து கொண்டுள்ளதால், தற்போது தோ்தல் புறக்கணிப்பை அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனா். இதன் மூலம் திமுகவுக்கு தோ்தலில் தக்க பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.