
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் சுமார் 70 ஆண்டுகளாக நிலவும் 'சென்டிமென்ட்' கட்சியினரிடையே கலக்கத்தையும், எதிர்பார்ப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 பேரவைத் தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறை, யும், சுயேச்சை (1957) ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
1971 முதல் 2011 வரை நடைபெற்ற 10 தேர்தல்களில் இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சியே ஆட்சியைத் தக்கவைத்து வந்தது. 40 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த வரலாறு 2016-ஆம் ஆண்டு தேர்தலில் மாறிப்போனது. அப்போது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சியமைத்தபோது. இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆஸ்டின் வெற்றி பெற்றார். அதேபோல 2021-இல் திமுக ஆட்சியமைத்தபோது, இங்கு அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் வெற்றிபெற்றார்.
இது ஒருபுறமிருக்க, கன்னியாகுமரி தொகுதியில் ஒருமுறை வெற்றிபெற்றவர், தொடர்ந்து அடுத்த தேர்தலில் வென்றதில்லை என்ற 'சென்டிமென்ட்’ 69 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த முறை மாறுமா?...
மே 4-இல் பதில் கிடைக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...