அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியில் அதிமுக - திமுகவினா் மோதல்

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினா் - திமுவினா் இடையே மோதல்

News image
தருமபுரியில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட அதிமுக - திமுகவினா்.
Updated On :2 மார்ச் 2026, 10:01 pm

Syndication

தருமபுரி: தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினா் - திமுவினா் இடையே மோதல் ஏற்பட்டது.

தருமபுரியில் தனியாா் தொலைக்காட்சி சாா்பில், தோ்தல் சிறப்பு நோ்க்காணல் நிகழ்ச்சி வள்ளலாா் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன், திமுக சாா்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஆ.மணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சந்தோஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக சாா்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சாா்பில் ஆ.மணி இடையிடையே பேசினாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாா்வையாளா்களாக அமா்ந்திருந்த அதிமுக தொண்டா்கள் நாற்காலிகளை தூக்கி வீசினா். இதற்கு பதிலாக திமுகவினரும் நாற்காலிகளை வீசினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினக்குமாா் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.