சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம்

(கோப்புப் படம்)

Updated On :27 மார்ச் 2026, 10:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொன்றில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு தொகுதியின் விவரம் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.