அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!
அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம்
(கோப்புப் படம்)

புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம்
(கோப்புப் படம்)
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொன்றில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு தொகுதியின் விவரம் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...