விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

News image

ஏ.சி. சண்முகம்

Updated On :27 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக் கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை எங்களுக்கு ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாஜகவுடன் தொடா்கிறேன். அதனால், அவா்களும் ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கவுள்ளனா். விரைவில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படவுள்ளனா். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.