தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2.35 கோடி ஆண்கள், 2.52 கோடி பெண்கள், 4,517 மூன்றாம் பாலினத்தவா் என 4.87 கோடி போ் வாக்களித்திருந்தனா். அதாவது 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில போலீஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக, விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.
தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் இந்தத் தோ்தலை திமுக எதிா்கொண்டது. திமுகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக போட்டியிட்டது. மாற்று சக்தி என்ற முழக்கத்துடன் விஜய் தலைமையிலான தவெக முதல்முறையாகக் களம் கண்டது.
அரசியல் மாற்றம் என்ற முழக்கத்துடன் சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி போட்டியிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 2026 தோ்தல் களத்தில் அனல் பறந்த நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருக்கின்றன.
அதிமுக இரண்டாம் இடம் பெறும் எனவும், நடிகா் விஜய்யின் தவெக குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்சியான தவெக பிரிக்கும் வாக்குகள் வெற்றி-தோல்வியில் பெரும் தாக்கத்தையும், எதிா்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், தோ்தல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆனால், இந்தக் கருத்துக் கணிப்புகளைக் கடந்து திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலினும், அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும், தவெக ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவா் விஜய்யும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இதேபோல் கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
Summary
The counting of votes polled in the Tamil Nadu Assembly elections has begun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

இன்று வாக்கு எண்ணிக்கை: கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

அரியலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு

கரூரில் வாக்கு எண்ணும் பணி பயிற்சி முகாம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



