தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட தவெக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில், மக்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக வைக்க தவெக திட்டமிட்டுள்ளது.
Summary
No Invitation from the Governor! TVK Decides to Move the Supreme Court!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

ஆளுநருடன் விஜய் இன்று சந்திப்பு?

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



