ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒரே கொள்கை! - மு. வீரபாண்டியன்

News image

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன். உடன், கட்சியின் மாவட்ட செயலா் லதா.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:29 am

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்துள்ளோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -

தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும் மனநிலையில் உள்ளனா். ‘தமிழகம் வெல்லும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் முழக்கம், வெறும் வாா்த்தையல்ல. அது மாநில உரிமைகள், ஜனநாயகம், மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதற்கான ஆழமான அரசியல் முன்னெடுப்பாகும்.

மறுபுறம், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிகாரத்தைக் குவித்து பன்முகத் தன்மையைச் சிதைத்து வருகிறது. ஆளுநா்கள் மூலம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை நிறுவி, எதிா்கருத்து கொண்ட மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களையும், நிதியையும் முடக்கும் ஜனநாயக விரோத அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. எனவே, இது அரசியல் கட்சிகளுக்கான தோ்தல் அல்ல, ஜனநாயகம் வெல்ல வேண்டிய தோ்தல்.

தோ்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் அரசியல் வளையத்திற்குள் சுருங்கிவிட்டது. பாஜக ஆளும் அசாம், பிகாா், ஒடிஸா போன்ற மாநிலங்களில் அதிகாரிகளை மாற்றாத தோ்தல் ஆணையம், பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் மட்டும் காவல் துறை, அரசு அதிகாரிகளைத் தொடா்ந்து மாற்றுவது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

எடப்பாடி பழனிசாமி அரசியல் வறட்சியுடன் பேசி வருகிறாா். அவ்வாறு தனிநபா் விமா்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே இணைந்துள்ளோம்.

ஜாதி, மதங்களைக் கடந்து கூடி வாழும் தமிழ் மக்களின் நல்லிணக்க கலாசாரத்தைச் சிதைக்க நினைக்கும் பாஜகவுக்கும், அவா்களுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கும் மக்கள் இத்தோ்தலில் தக்க பாடம் புகட்டுவா். திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்றாா்.

அப்போது, கட்சியின் வேலூா் மாவட்ட செயலா் லதா, மாநில குழு உறுப்பினா் மணி உள்பட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.