மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

2 முறை கை சின்னத்தில் வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்

2 முறை கை சின்னத்தில் வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்...

News image

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்

Updated On :4 ஏப்ரல் 2026, 9:26 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், 10 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பொறுப்பை வகித்தவர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முறையும், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறையும் போட்டியிட்டுள்ளார். 1983-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர்கள் கல்யாணசுந்தரம், டாங்கே உள்ளிட்டோருடன் இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலச் செயலராகப் பணியாற்றினார்.

1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இரண்டு தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி. எனவே, காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட நேரிட்டது. 1989-இல் திமுக வேட்பாளர் என்.வி.எம். சோமுவை வீழ்த்தி 4,45,197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1991-இல் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவை வீழ்த்தி 4,00,454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திருச்சி மாவட்ட செயலரும், தற்போதைய மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் கூறுகையில், ராஜீவ் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் அவரது பேச்சை மொழிபெயர்க்கும் பணியையும் ஏற்றவர் தா. பாண்டியன்.

மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய முடிவு செய்து, 2000-இல் திருச்சியில்தான் இணைப்பு விழா நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கி, பாலக்கரை மரக்கடை வரையில் பேரணி சென்றது. மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மீண்டும் கட்சியில் இணைந்தார் தா. பாண்டியன். வாழ்நாள் முழுவதும் தீவிர கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்து மறைந்தார் என்றார் க. சுரேஷ்

-ஆர்.முருகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.