சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பி.இ./ டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி(தமிழ்நாடு) மற்றும் வலியமலா(கேரளா) ஆகிய

News image
Updated On :23 ஆகஸ்ட் 2013, 8:39 pm IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி(தமிழ்நாடு) மற்றும் வலியமலா(கேரளா) ஆகிய இடங்களில் உள்ள திரவ எரிபொருள் திட்ட மையத்தில் அளிக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு பி.இ., டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி பிரிவு: Graduate Apprentice

மொத்த காலியிடங்கள்: 74

பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், நூலக அறிவியல்

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறைக்கு பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊக்கத்தொகை: ரூ.5000 அளிக்கப்படும்.

பயிற்சி பிரிவு: Technician Apprentice

மொத்த காலியிடங்கள்: 120

பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில்,

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மாத ஊக்கத்தொகை: ரூ.3000 அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2013

ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி நாள்: 30.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lpsc.gov.in என்ற இமையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.