வேலைவாய்ப்பு
மருந்து வழங்குநா் பணி:விண்ணப்பிக்க ஆக.25 கடைசி
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநா், சிகிச்சை உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட தகுதி
சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநா், சிகிச்சை உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள் ஆக.25-ஆம் தேதி என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.