தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பதிவு அஞ்சம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2021
பணி: ஊர்தி ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35-க்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் 32-க்குள்ளும், இதர வகுப்பினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தானியங்கி மோட்டார் வாகன பழுது பணிமனையில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒட்டுநர் உரிமம் நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயற்பொறியாளர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்டம், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை- 600035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.09.2021
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://bit.ly/3svT0xM என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.