சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
அறிக்கை எண்.43/2019
நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்
பணி : Law Clerks
மொத்த காலிப் பணியிடங்கள் : 37
தகுதி : 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படித்து சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hcmadras.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்த சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: mhclawclerkrec@gmail.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras - 600 104.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.09.2021
மேலும் விவரங்கள் அறிய www.hcmadras.tn.nic.in அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.