திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்திலுள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணிக்கு 62 வயதுக்குள்பட்ட, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காவல் துறை மூலமாக மாதம் ரூ. 7,600 ஊதியமாக வழங்கப்படும்.
பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, படை விலகல் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, உரிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

