தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சென்னை மண்டல மின்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள சேத்பட்டு ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள மீனவள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மீன்வள உதவியாளர்
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழபதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை
இணை இயக்குநர்(மண்டலம்)
சென்னை அலுவலகம்,
டி.எம்.எஸ் வளாகம் மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்கள் வந்து சேர கடைசி தேதி: 02.08.2021
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021071655.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.