இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:05 am

தினமணி

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அர்ச்சகர்(உள்கோயில்) - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600
தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான 1 ஆண்டு படிப்பினை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பரிசாரகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: மேளம் செட் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,300
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர் - 01
பணி: இரவு காவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600

பணி: திருவலகு - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: கால்நடை பராமரிப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப் பாட சாலையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வந்து ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொழுத்து பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில், 315, தங்கசாலை தெரு, சென்னை - 3.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 20.09.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.