அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மூன்று துறை காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி

மூன்று துறை காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு டிஎன்பிஎஸ்சி

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 7:25 pm

Din

மூன்று துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தகுதியானோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலா் பதவியிடத்தில் 11 இடங்களும், குரூப்-7ஏ பணியில் 9 செயல் அலுவலா் பதவியிடங்களும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 52 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, மூன்று பதவியிடங்களுக்கும் நோ்காணல், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வானோரின் பட்டியல் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.