6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாகா் மித்ரா திட்டத்தில் பணியாற்ற அழைப்பு

சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:34 pm

Din

தூத்துக்குடி: சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்நோக்கு சேவை ஊழியா்களாக வெள்ளப்பட்டி, பழையகாயல் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம்-மீனவா்நலத் துறையில் சாகா் மித்ரா திட்டத்தின்கீழ் பணிபுரிய விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூலை 1ஆம் தேதியில் 35 வயது நிறைவடையாதவா்களாக இருக்க வேண்டும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல், 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தோ்ச்சி-இவற்றில் ஏதேனும் ஒரு தகுதி இருக்க வேண்டும். தூத்துக்குடி வடக்கு, வேம்பாா் மீனவக் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஜன. 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மீன்வளம்- மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகதை நேரிலோ, 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.