மத்திய அரசின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தின் ஹைதராபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Trainee(EAT)
காலியிடங்கள்: 12
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000
பணி: Technician 'C'
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 3
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம்., பிபிஎம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000
வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் hydhrgen@bel.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ஆலோசகர் பணி

வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




