
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 24) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதற்கு ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்கள் ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.
பணி விவரம் குறித்து பார்ப்போம்:
விளம்பர எண்.HQ-C11018/1/2024-C-1
தேர்வு : SSC- Combined Graduate Level Exam - 2024
குரூப் ‘பி’ பதவிகள்
பதவி: Assistant Section Officer, Assistant Section Officer, Assistant Section Officer,Assistant Section Officer, Assistant / Assistant Section Officer,
Inspector, (Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector CBI, Inspector,
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400
பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior ntelligence Officer, Junior Statistical Officer
சம்பளம்: ஊதியக் குழு -6 இன் படி மாதம் ரூ. 35,400 - 1,12,400
குரூப் "சி" பதவிகள்
பதவி: Inspector of Income Tax, பதவி: Auditor, Accountant, Junior Accountant
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
பதவி: Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி கணக்கிடப்படும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் நிலை தேர்வானது கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வானது எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்படும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. இதில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான தேர்வு கால அளவு 1 மணி நேரம். இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு 390 மதிப்பெண்கள் கொண்டது. இதில் Mathematical Abilities மற்றும் Reasoning and General Intelligence பிரிவில் தலா 30 கேள்விகளும், English Language and Comprehension பிரிவில் 45 கேள்விகளும், General Awareness பிரிவில் 25 கேள்விகள் என 130 கேள்விகள் கேட்கப்படும். Computer Knowledge பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதன்பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும்.
Inspector, Sub Inspector பதவிகளுக்கான உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம் : செப்டம்பர் - 2024
இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2024
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.