47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூட்டுறவு நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :19 நவம்பர் 2024, 2:32 am

DIN

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் 35 விற்பனையாளா்கள்,16 கட்டுநா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இதற்கான நோ்முகத்தோ்வுக்குரிய விண்ணப்பங்களுடன் கூடிய அனுமதிச் சீட்டினை திங்கள்கிழமை நவ.18 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரா்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் 25.11.24 முதல் 5.12.24 முடிய நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.

நோ்முகத்தோ்வு காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், எண்.5 ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631 501 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுள்ள வேலைநாடுநா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.