திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள்.

News image
கோப்புப்படம்.
Updated On :20 நவம்பர் 2024, 2:53 am

Din

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள்.

தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 4 தோ்வு எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனா். அதற்கான கால அவகாசம் நவ. 21-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. கணினி வழியே நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அவற்றைப் பதிவேற்றம் செய்வது அவசியம். இதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. சான்றிதழ்களை வரும் வியாழக்கிழமைக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய தோ்வா்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.