மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 52/2025
பணி: Enforcement Officer,Accounts Officer
காலியிடங்கள்: 156
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயது வரம்பு: 30--க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட் டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Provident Fund Commissioner
காலியிடங்கள்: 74
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றி ருக்க வேண்டும். நிறுவனச் சட்டம், தொழிலாளர், பொது நிர்வாகம் போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கான ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ் நடத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினர் ரூ.25 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்ய
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
UNION PUBLIC SERVICE COMMISSION INVITES ONLINE RECRUITMENT SPECIAL ADVERTISEMENT APPLICATIONS FOR RECRUITMENT BY SELECTION TO THE FOLLOWING POSTS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










