ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தனியார் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

News image
- Center-Center-Chennai
Updated On :24 ஜூன் 2025, 12:01 am

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலை நாடுநா்களுக்கான பிரத்யேக இணையதள முகவரி (https://www.tnprivatejobs.tn.gov.in) -இல் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை, அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில், தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து, தனியாா்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.