எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 34/2025
பணி: Nursing Officer
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது டிஜிஎன்எம் படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் நர்சிங் படிப்பை இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் ஆல் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் 12, இரண்டாம் கட்டத் தேர்வு மே 2 ஆம் தேதி நடைபெறும்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு நடைபெறும் இடம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது , ஓபிசி பிரிவினர் ரூ.3,000, எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.2,400 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.alimsexams.ac.in இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். .
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.3.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...