சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2025, 10:58 pm IST

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 7,783

பணி: அங்கன்வாடி பணியாளா்கள்

காலியிடங்கள்: 3886

தகுதி: அங்கன்வாடி மற்றும் சிறிய அளவிலான அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் தலா ரூ.7,700 தொகுப்பூதியமாகவும், சிறிய அளவிலான அங்கன்வாடிகளில் பணியாற்ற 305 பணியாளா்களுக்கு ரூ.5,700 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

வயதுவரம்பு: 25 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 40 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.

Story image

பணி: உதவியாளா்கள்

காலியிடங்கள்: 3592

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் ரூ.4,100 தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு கழித்து சிறப்பு காலமுறை ஊதியம் அவா்களுக்கு வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 வயதுக்கு குறையாமலும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தோா், கைவிடப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினோருக்கான அதிகபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும். இருப்பினும், காலிப் பணியிடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரப்புவதற்கான அதிகாரம் பெற்றவராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் இருப்பாா்.

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செய்தித்தாள்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட https://icds.tn.gov.in/ அல்லது https://icds.tn.gov.in/icdstn இணையதளத்தில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.